கொழும்பு: இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலக நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், பதவியை ராஜினாமா செய்ய கோத்தபய ராஜபக்சே ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகிய நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக வலியுறுத்தி அழுத்தம் கொடுக்கப்படுகிறது.